வியாழன், 26 பிப்ரவரி, 2009

இன்றைய செய்தி புகைப்படங்கள் (பிப்,இருபத்தி ஆறு)

ரெசுல் பூக்குட்டிக்கு மும்பை விமான நிலையத்தில் கோலாகல வரவேற்பு

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் சிறந்த ஒலி கூட்டமைப்பு ( சவுண்ட் மிக்சிங்குக்காக ) ஆஸ்கர் விருது பெற்ற ரெசுல் பூக்குட்டி இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது . கையில் ஆஸ்கர் விருதுடன் வந்த ரெசுல் பூக்குட்டியை , அவரது உறவினர்கள் உற்சாக பெருமிதத்துடன், ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்னர். அவருடன் ஸ்லம்டாக் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பாலிவுட் நடிகர் இர்பான் கானும் வந்தார்.
















தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் : ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். ஆஸ்கர் விருதுபெற்ற பின் சென்னை திரும்பிய அவர், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இசை மக்கள் மத்தியில் நிலவும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது என்றும், இசைக்கு மொழி கிடையாது, மக்களை நேரடியாக மகிழ்விப்பதே விருதுகள் பெறுவதற்கு சமம் என்று கூறினார். மேலும் தமிழ் திரைஇசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதே தமது லட்சியம் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: