வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

இலங்கை பிரச்னையில் மத்திய அரசு உணர்ச்சியற்று இருக்கிறது : அத்வானி






புதுடில்லி : இலங்கை பிரச்னையில் மத்திய அரசு உணர்ச்சியற்று இருப்பதாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார். டில்லியில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.,வினர் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் பேசிய அத்வானி இவ்வாறு கூறியுள்ளார். அத்வானி கூறியதாவது : வலுக்கட்டாயமாக போரை திணித்து இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது . இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அப்பாவி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில், நாட்டின் ஒட்டுமொத்த கவனமும், அப்பாவி தமிழர்கள் காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.

கருத்துகள் இல்லை: