திங்கள், 16 பிப்ரவரி, 2009

இன்றைய (பிப்ரவரி பதினேழு) செய்தி புகைப்படங்கள்






















சென்னை விழாவில் முதல்வர் நரேந்திர மோடி பேச்சு




சென்னை: ""அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை வேறுபாடு இருக்கலாம்; மாண்புகளை விட்டு விடக்கூடாது. அரசியல் தீண்டாமை என்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்,'' என்று நரேந்திர மோடி பேசினார்."அலையன்ஸ்' பதிப்பகம் சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெண்கல்வி தொடர்பான நூல், "கல்வியே கற்பகத்தரு' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடந்த விழாவில், இந்த நூலினை "துக்ளக்' ஆசிரியர் சோ.ராமசாமி வெளியிட, நல்லி குப்புசாமி, பி.எஸ்.ராகவன், அவ்வை நடராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விழாவில், நரேந்திர மோடி பேசியதாவது:நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, பெண்கல்வியில் குஜராத் மிகவும் பின்தங்கி இருந்தது. இதை மாற்றுவதற்காக பெண் குழந்தைகள் படிக்க திட்டங்களைச் செயல்படுத்தினேன்; மக்களிடம் நேரடியாகப் பேசினேன்.இதன் காரணமாக, இன்று 100 சதவீத பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். மாணவர்கள் கல்வி பயிலும் போது 42 சதவீதமாக இருந்த இடைநிற்றல், தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

கருத்துகள் இல்லை: