ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

நாகேஷ் உடல் தகனம் : ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி





பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ், நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து நாகேஷின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நடிகர் நாகேஷின் மறைவு செய்தியறிந்த திரையுலகைச் சேர்ந்த ரஜினிகாந்த், கமல், ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, மனோரமா, இயக்குனர்கள் கே.டி.குஞ்சுமோன், ஆர்.பி.சவுத்திரி, சந்தானபாரதி, பாரதிராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று நாகேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நாகேஷின் உடலுக்கு மலர் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை நாகேஷ் இறுதி ஊர்வலம் நடந்தது. ஆழ்வார்பேட்டையில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானம் வரை நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரமுகர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: